search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
    X

    பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    • சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
    • பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடிதண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 4-ந் தேதி பூண்டி ஏரி வந்த டைந்தது. ஆரம்பத்தில் வினாடிக்கு 20 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் தண்ணீர் வரத்து அதிகபட்சமாக வினாடிக்கு 310 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது. இந்த நிலையில் ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை எடுத்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது. இன்று காலை வினாடிக்கு 85 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டு இருந்தது.

    கிருஷ்ணா தண்ணீர் வரத்து குறைந்ததை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 26. 55 அடியாக பதிவானது. 1.071 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×