search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வரும் வெள்ளிக்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்காது என அறிவிப்பு
    X

    வரும் வெள்ளிக்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்காது என அறிவிப்பு

    • தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வெள்ளிக்கிழமை அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்து இருந்தார்.

    வண்டலூர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து, வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×