search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக சட்டசபை 9-ந்தேதி கூடுகிறது: சபாநாயகர் அறிவிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழக சட்டசபை 9-ந்தேதி கூடுகிறது: சபாநாயகர் அறிவிப்பு

    • தமிழக சட்டசபையின் கூட்டத்தை அக்டோபர் மாதம் 9-ந்தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியுள்ளார்.
    • சபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.

    சென்னை:

    சபாநாயகர் அப்பாவு இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி கூடுகிறது. சபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத்தை அக்டோபர் மாதம் 9-ந்தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியுள்ளார். அன்று 2023-2024-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவு தொடர்பான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×