search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் ரூ.13 லட்சம் நகை-பணம் கொள்ளை
    X

    ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் ரூ.13 லட்சம் நகை-பணம் கொள்ளை

    • வெகுநாட்களாக வீடு பூட்டி கிடப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம்-நகைகளை திருடி சென்றுள்ளனர்.
    • திருட்டு சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை பாரதி நகரை சேர்ந்தவர் நாக ராஜன்(வயது 66). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி அறிவை.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறிவை உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

    இதனால் வீட்டை பூட்டி விட்டு விருதுநகர் ஆஸ்பத்திரியில் மனைவியை சிகிச்சைக்காக சேர்த்தார். அவருடன் நாகராஜன் ஆஸ்பத்திரியில் தங்கி யிருந்தார். இந்த நிலையில் வீட்டின் முன்கதவு இரவில் திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் நாகராஜனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஊருக்கு திரும்பி வந்தார். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்தி ருந்த 21 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் திருடு போனது தெரிய வந்தது. வெகுநாட்களாக வீடு பூட்டி கிடப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம்-நகைகளை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் நாகராஜன் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வர வழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூட்டி கிடந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×