என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மதுரையில் தூக்கு கயிறுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த வாலிபர்
ByMaalaimalar20 March 2024 12:15 PM GMT (Updated: 20 March 2024 1:19 PM GMT)
- பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.
- சங்கரபாண்டியன் என்பவர் கையில் தூக்கு கயிறுடன் விழிப்புணர்வு பதாகையை ஏந்தி மனுத்தாக்கல் செய்ய வந்தார்.
மதுரை:
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. அப்போது மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் என்பவர் கையில் தூக்கு கயிறுடன் விழிப்புணர்வு பதாகையை ஏந்தி மனுத்தாக்கல் செய்ய வந்தார். இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதுகுறித்து சங்கரபாண்டியன் கூறுகையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்களின் பணத்தை பெற்றுக்கொண்டு ஊழல்வாதிகளுக்கு வாக்களித்தால் அது தற்கொலை செய்வதற்கு சமம் என்கின்ற வகையிலும், வாக்குக்காக பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தூக்கு கயிறுடன் போலியான ரூபாய் நோட்டுகளை இணைத்து மனுதாக்கல் செய்ய வந்ததாக தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X