search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி வழக்கு... நாளை விசாரணை
    X

    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி வழக்கு... நாளை விசாரணை

    • திட்டமிட்டபடி வரும் 9-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
    • அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது.

    மதுரை:

    ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி வரும் 9-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டது.

    பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பது சட்டவிரோதம். போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது.

    இதையடுத்து வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×