search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு
    X

    சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஏழு பேருக்கு தொடர் சிகிச்சை.
    • காயமுற்ற மூன்று பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதி.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 30 வயது இளைஞர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் கந்தசாமி என்பதும், இவர் பெட்ரோல் பம்ப்-இல் பணியாற்றி வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

    இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த நான்கு பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், மூன்று பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், பங்க் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×