search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆர்எஸ்எஸ் பேரணி- உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சீராய்வு மனு தாக்கல்
    X

    ஆர்எஸ்எஸ் பேரணி- உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சீராய்வு மனு தாக்கல்

    • ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக அரசு மனு தாக்கல்.
    • மனுவில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால் சீராய்வு மனுவில் தமிழக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

    பாஜக மற்றும் இந்து அமைப்பு பிரமுகர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த நிலையில் சட்ட ஓழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுத்து வருகிறது.

    ஆர்எஸ்எஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளின் பேரணிக்கு தமிழக காவல் துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதற்கு எதிராக, ஆர்எஸ்எஸ் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

    இந்நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

    தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், விசிக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால் சீராய்வு மனுவில் தமிழக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

    மேலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரியும் காவல் துறை தரப்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×