search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
    X

    5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

    • 32 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களுக்கு முன் மீனவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் அனைத்து போராட்டங்களையும் வாபஸ் பெற்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வருவதாக கூறி சிறைபிடிப்பதும், பல முறை விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த கோரி மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 32 மீனவர்களை எல்லை தாண்டி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் 5 விசைபடகுகளையும் சிறை பிடித்தது. கைதான மீனவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் கைதானது ராமேசுவரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 32 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மீனவர்கள் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களையும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர். 2 நாட்களுக்கு முன் மீனவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் அனைத்து போராட்டங்களையும் வாபஸ் பெற்றனர்.

    இந்த நிலையில், இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடிக்க செல்லும் அனுமதி டோக்கன் பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில் அதிகளவில் இறால் மீன் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    Next Story
    ×