search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜனதாவில் சேர்ந்தது ஏன்? ராதிகா சரத்குமார் பதில்
    X

    பா.ஜனதாவில் சேர்ந்தது ஏன்? ராதிகா சரத்குமார் பதில்

    • பெண்கள் தங்களின் பிரச்சனைகளை பேசுகிறார்கள்.
    • வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

    விருதுநகர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

    கேள்வி: முதன்முறையாக வேட்பாளராக இருக்கும் அனுபவம் எவ்வாறு இருக்கிறது?

    பதில்: எல்லா இடங்களிலும் மக்கள் தங்களின் அன்பை உணர்த்துகிறார்கள். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை பேசுகிறார்கள். வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

    கேள்வி: நீங்கள் பாரதிய ஜனதாவில் சேர்ந்தது ஏன்?

    பதில்: ஏன் சேரக்கூடாதா? பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உங்களுக்கு தெரியவில்லையா?

    கேள்வி: தொகுதியில் உங்களுக்கு முக்கிய போட்டியாளர் யார்?

    பதில்: விஜய பிரபாகரோ அல்லது மாணிக்கம் தாகுரோ. போட்டியாளர்களை பற்றி சிந்திக்கவில்லை. நாங்கள் எங்களின் போசனைகளை ஊக்குவிக்கவும், அதை மக்களிடையே பரப்பவும் முயற்சிக்கிறோம்.

    கேள்வி: எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடரந்து செயல்படுவீர்களா?

    பதில்: அதையெல்லாம் முடிவு செய்ய இன்னும் நேரம் இருக்கிறது. இப்போது தேர்தல்வெற்றியே ஒரே இலக்கு என்றார்.

    Next Story
    ×