search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தல் பத்திர மோசடியில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது- செல்வப்பெருந்தகை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தேர்தல் பத்திர மோசடியில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது- செல்வப்பெருந்தகை

    • கறுப்பு பணத்தை பா.ஜ.க.தான் உருவாக்கி கொண்டிருக்கிறது.
    • பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து பல கோடி வாங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் பத்திர மெகா ஊழலை விஞ்ஞான முறையில் பா.ஜனதாவினர் செய்துள்ளனர். கறுப்பு பணத்தை மீட்போம். பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் கறுப்பு பணத்தை பா.ஜ.க.தான் உருவாக்கி கொண்டிருக்கிறது. பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து பல கோடி வாங்கப்பட்டுள்ளது. தேர்தல் நிதியை பா.ஜ.க மிரட்டி வாங்கி உள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

    இதுபற்றி பேசினால் வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் மிரட்டல் விடுக்கப்படுகிறது.

    இந்த மோசடியில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கோபண்ணா, ஆனந்த் சீனிவாசன் உடன் இருந்தனர்.

    Next Story
    ×