search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழனி கோவிலில் பக்தரிடம் செல்போனை பறித்துச் சென்ற குரங்கு
    X

    பழனி கோவிலில் பக்தரிடம் செல்போனை பறித்துச் சென்ற குரங்கு

    • கோவில் ஊழியர் தன்னால் எப்படி குரங்கிடம் இருந்து செல்போனை மீட்டு தர இயலும் என கேட்டார்.
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பொருளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் நேற்று சுதந்திர தின விடுமுறை நாளை முன்னிட்டு மலைக்கோவிலில் உள்ள முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவ்வாறு கூடி இருந்த பக்தர்களில் சிலர் மலை மீது அமர்ந்திருந்த குரங்குகளை தங்களது செல்போனின் மூலமாக படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

    அப்பொழுது ஒரு பக்தர் குரங்கின் அருகே சென்று போட்டோ எடுத்தார். தனக்கு ஏதோ தருகிறார் என நினைத்த குரங்கு செல்போனை திடீரென பறித்துக் கொண்டு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர் கூச்சலிட்டார். செல்போனை பறித்த குரங்கு லாவகமாக தப்பி செல்போனை கையில் வைத்துக்கொண்டு மலை மீது உள்ள கட்டிடங்களில் தாவித் தாவி சென்றது. அந்த செல்போனை உணவு பண்டம் என நினைத்து கடித்தது. இதனால் பதறிப்போன பக்தர் செல்போனை கொடுக்குமாறு அந்த குரங்கைத் துரத்திச் சென்றார்.

    ஆனால் குரங்கு வேகமாக வேறு கட்டிடத்துக்கு தாவிச் சென்றது. செல்போனை பறி கொடுத்த பக்தர் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் சொல்லி செல்போனை மீட்டுத் தருமாறு கேட்டார். ஆனால் கோவில் ஊழியர் தன்னால் எப்படி குரங்கிடம் இருந்து செல்போனை மீட்டு தர இயலும் என கேட்டார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பொருளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குரங்கின் அருகே சென்று செல்போனை வைத்து படம் பிடிக்க வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வாழைப்பழம், தேங்காய், உணவு திண்படம் போன்றவற்றை பறித்துச் செல்லும் குரங்கு தற்போது செல்போனையும் பறித்து சென்றது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×