search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள்: அமைச்சர் சிவசங்கர் 8-ந்தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை
    X

    பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள்: அமைச்சர் சிவசங்கர் 8-ந்தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை

    • வருகிற 8-ந்தேதி பொங்கல் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • பொதுமக்கள் தாங்கள் செல்லும் ஊருக்கு சிறப்பு பஸ்களில் செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் செல்லும் நிலையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    இந்த ஆண்டும் ஜனவரி 14, 15 ஆகிய தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர்.

    எனவே பொங்கல் பண்டிகைக்காக எத்தனை சிறப்பு பஸ்களை இயக்கலாம் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் இந்த ஆண்டு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கலாமா? என்பது தொடர்பாகவும் ஆலோசித்து முடிவு செய்யப்பட உள்ளது.

    வருகிற 8-ந்தேதி பொங்கல் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் தாங்கள் செல்லும் ஊருக்கு சிறப்பு பஸ்களில் செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

    Next Story
    ×