என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள்: அமைச்சர் சிவசங்கர் 8-ந்தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை
- வருகிற 8-ந்தேதி பொங்கல் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பொதுமக்கள் தாங்கள் செல்லும் ஊருக்கு சிறப்பு பஸ்களில் செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் செல்லும் நிலையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இந்த ஆண்டும் ஜனவரி 14, 15 ஆகிய தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர்.
எனவே பொங்கல் பண்டிகைக்காக எத்தனை சிறப்பு பஸ்களை இயக்கலாம் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.
கூட்டத்தில் இந்த ஆண்டு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கலாமா? என்பது தொடர்பாகவும் ஆலோசித்து முடிவு செய்யப்பட உள்ளது.
வருகிற 8-ந்தேதி பொங்கல் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் தாங்கள் செல்லும் ஊருக்கு சிறப்பு பஸ்களில் செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்