search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4-வது மாடியில் இருந்து குதித்து 9 வயது சிறுமி தற்கொலை
    X

    4-வது மாடியில் இருந்து குதித்து 9 வயது சிறுமி தற்கொலை

    • தாய் இறந்ததை 9 வயது சிறுமியால் தாங்கி கொள்ள முடியவில்லை.
    • அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை வில்லாபுரத்தை அடுத்துள்ள பத்மா தியேட்டர் எதிரில் உள்ள 3 மாடி குடியிருப்பை சேர்ந்தவர் கண்ணாயிரம், தொழிலாளி. இவரது மனைவி பொண்ணு. இவர்களுக்கு 9 வயதில் இளவரசி என்ற மகள் இருந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த மாதம் பொண்ணு கணவர், குழந்தைகளை பிரிந்து சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த பொண்ணு சென்னையில் உறவினர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தாயாரின் இந்த முடிவு இளவரசிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக யாருடனும் பேசாமல் சோகத்துடன் காணப்பட்டார். தாய் இறந்ததை 9 வயது சிறுமியால் தாங்கி கொள்ள முடியவில்லை.

    சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த இளவரசி. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்தவர்கள் இளவரசியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய் தற்கொலை செய்து கொண்ட ஒரு மாதத்தில் மகளும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சிைய ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×