search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கல்பட்டில் அரசுப்பேருந்து, லாரி மோதி பயங்கர விபத்து- 5 பேர் பலி
    X

    செங்கல்பட்டில் அரசுப்பேருந்து, லாரி மோதி பயங்கர விபத்து- 5 பேர் பலி

    • விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
    • விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அருகே லாரி மீத அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    திருச்சி- சென்னை சாலையில் தொழுப்பேட்டில் நிகழ்ந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

    விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×