என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சபாநாயகருக்கு 'காமராஜர் கதிர்' விருது
- விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா மே 28-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது.
- “அம்பேத்கர் சுடர்” விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கு வழங்கப்படுகிறது.
சென்னை:
விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
அந்த வரிசையில் 2023-ம் ஆண்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி- விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா-வுக்கும், "பெரியார் ஒளி" விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் து.ராஜாவுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.
2023-ஆண்டுக்கான வி.சி.க.-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் வருமாறு:-
1. அம்பேத்கர் சுடர்-திபங்கர் பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர், சி.பி.ஐ. (எம்.எல்).
2. பெரியார் ஒளி-து.ராஜா, பொதுச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
3. காமராசர் கதிர்-மு.அப்பாவு, தலைவர், தமிழ்நாடு சட்டப் பேரவை.
4. அயோத்திதாசர் ஆதவன்-ராஜேந்திரபால் கவுதம், முன்னாள் அமைச்சர், டெல்லி மாநில அரசு.
5. மார்க்ஸ் மாமணி-கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி.பி.ஐ.(எம்)
6. காயிதேமில்லத் பிறை-முனைவர் மோகன் கோபால், முன்னாள் துணைவேந்தர், சட்டப் பல்கலைக்கழகம், பெங்களூர்.
7. செம்மொழி ஞாயிறு-தாயம்மாள் அறவாணன், தமிழறிஞர்.
விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா மே 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்