search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போதைப்பொருள் கடத்தலில் யார்-யாருக்கு தொடர்பு: ஜாபர் சாதிக்கின் 7 செல்போன்கள் ஆய்வு
    X

    போதைப்பொருள் கடத்தலில் யார்-யாருக்கு தொடர்பு: ஜாபர் சாதிக்கின் 7 செல்போன்கள் ஆய்வு

    • செல்போன்களில் இருந்து வாட்ஸ்அப் வழியாக ஜாபர் சாதிக் யார்-யாருக்கு என்னென்ன தகவல்களை அனுப்பி உள்ளார் என்பது பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
    • ஜாபர் சாதிக்கின் காவல் முடிவடைந்ததும் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

    சென்னை:

    தி.மு.க. அயலக அணியில் பொறுப்பு வகித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை முதலில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணை முடிந்து நேற்று ஜாபர் சாதிக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் மேலும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி கிடைத்தது.

    ஜாபர் சாதிக்கின் இமெயிலில் உள்ள விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தப்பட இருப்பதாக கூறிய அதிகாரிகள் மேலும் 3 நாட்கள் விசாரணைக்கு அனுமதி கேட்டிருந்தனர்.

    இதன்படி ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 7 செல்போன்களை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. அந்த செல்போன்களில் இருந்து இ-மெயில் மூலமாக ஜாபர் சாதிக் பல்வேறு தகவல்களை வெளிநபர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

    அதுதொடர்பான தகவல்களை செல்போன்களில் இருந்து அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள். இதன் மூலமாக ஜாபர் சாதிக்குடன் போதைப்பொருள் கடத்தலில் யார்-யாருக்கு தொடர்புள்ளது என்பதை கண்டறிய டெல்லி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    செல்போன்களில் இருந்து வாட்ஸ்அப் வழியாக ஜாபர் சாதிக் யார்-யாருக்கு என்னென்ன தகவல்களை அனுப்பி உள்ளார் என்பது பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த சினிமா பிரபலங்கள், அரசி யல் பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்தி வரும் இந்த செல்போன் தகவல்கள் சேகரிப்பு போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இதனால் ஜாபர் சாதிக்கின் காவல் முடிவடைந்ததும் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

    Next Story
    ×