search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இஸ்ரேலில் உள்ள தமிழர்களை மீட்க உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு
    X

    இஸ்ரேலில் உள்ள தமிழர்களை மீட்க உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு

    • இஸ்ரேல் நாட்டில் போர் காரணமாக அவசர நிலை ஏற்பட்டு உள்ளது.
    • இஸ்ரேல் ராணுவம்-ஹமஸ் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமஸ் பயங்கரவாத அமைப்பு இடையே போர் துவங்கியுள்ளது. இருதரப்பும் மாறி மாறி ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்தது.

    இந்த நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் தமிழர்கள் தமிழ்நாடு அரசை தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    +91-87602 48625

    +91-99402 56444

    +91-96000 23645

    nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது.

    Next Story
    ×