search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 ரூபாய் நாணயங்களுடன் வேட்புமனுத்தாக்கல் செய்த வேட்பாளர்
    X

    10 ரூபாய் நாணயங்களுடன் வேட்புமனுத்தாக்கல் செய்த வேட்பாளர்

    • சப்-கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    • நாணயங்களுடன் வேட்பாளர் வந்ததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பொள்ளாச்சி:

    தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது.

    அரசியல் கட்சியின் வேட்பாளர்கள், சுயேட்சைகள் என பலரும் அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உடுமலையை சேர்ந்த பெஞ்சமின் பிரபாகரன் என்பவர் போட்டியிடுகிறார். அவர் நேற்று பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யாவிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

    அப்போது அவர் டெபாசிட் தொகையான ரூ.25 ஆயிரத்தை 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்து நூதன முறையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. இந்த நாணயங்களை அனைவரும்வாங்க வேண்டும். இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நாணயங்களாக கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து சப்-கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். நாணயங்களுடன் வேட்பாளர் வந்ததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×