search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் கொரோனா அதிகரிப்பு- முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
    X

    சென்னையில் கொரோனா அதிகரிப்பு- முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

    • வணிக வளாகம், திரையரங்கம், மார்க்கெட், அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
    • 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல், வணிக வளாகம், திரையரங்கம், மார்க்கெட், அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் இதுபோன்ற இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அங்காடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×