search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிவகாசி அருகே மின்னல் தாக்கியதால் பட்டாசு ஆலையில் தீ
    X

    சிவகாசி அருகே மின்னல் தாக்கியதால் பட்டாசு ஆலையில் 'தீ'

    • மின்னல் தாக்கியதில் சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளத்தில் செயல்பட்டு வரும் சேவுகன் என்பவரது பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த சில பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் நேற்று மாலை மழை பெய்தது. நள்ளிரவில் சில இடங்களில் மட்டும் மழை பெய்த நிலையில் இடி, மின்னல் அதிகமாக இருந்தது. மின்னல் தாக்கியதில் சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளத்தில் செயல்பட்டு வரும் சேவுகன் என்பவரது பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

    இன்று அதிகாலை 2.30 மணியளவில் அனுப்பங்குளம் பகுதியில் இடி, மின்னல் அடித்தப்படி இருந்தது. அப்போது சேவுகனின் பட்டாசு ஆலையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின்னல் தாக்கி தீ பிடித்தது.

    இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த சில பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

    மேலும் பட்டாசு ஆலையின் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. பட்டாசு ஆலை பூட்டப்பட்டிருந்த நேரத்தில் மின்னல் தாக்கி தீ பிடித்ததால் பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×