search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கே.எஸ்.அழகிரி தலைமையில் தான் பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம்- தினேஷ் குண்டுராவ் அறிவிப்பு
    X

    கே.எஸ்.அழகிரி தலைமையில் தான் பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம்- தினேஷ் குண்டுராவ் அறிவிப்பு

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
    • கே.எஸ்.அழகிரியுடன் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து உழைக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் பரவியது. கட்சி மேலிடம் இது பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லவில்லை. இதனால் தொண்டர்கள் இடையே குழப்பமான சூழ்நிலை நிலவியது.

    இந்த நிலையில் கும்பகோணத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மண்டல மாநாட்டில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும் கலந்து கொண்டார். அப்போது தலைவர் மாற்றம் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலையும் கே.எஸ்.அழகிரி தலைமையில் தான் சந்திப்போம் என்று உறுதியாக நம்புகிறேன். தேர்தலை சந்திக்கவும், மிகப்பெரிய வெற்றியை ஈட்டவும் கே.எஸ்.அழகிரியுடன் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து உழைக்க வேண்டும் என்றார்.

    கடந்த சில நாட்களாக காங்கிரஸ் புதிய தலைவராக செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

    Next Story
    ×