என் மலர்

    தமிழ்நாடு

    சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் வேஷ்டி அணியும் விழா அழைப்பிதழ்
    X

    சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் வேஷ்டி அணியும் விழா அழைப்பிதழ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருகிற 24-ந்தேதி மாலை நடைபெற உள்ள வேஷ்டி அணியும் விழாவுக்கு தனியாக மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • தடபுடல் விருந்துடன் அன்று தாய்மாமன் முறைப்படி சடங்குகளுடன் விழா நடைபெறுகிறது.

    பெண் குழந்தைகளுக்கு காது குத்தும் விழா, மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தாய்மாமன் முறையை முன்னிலைபடுத்தி நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் சிறுவன் ஒருவனுக்கு அவரது தந்தை வேஷ்டி அணியும் விழா ஒன்றை நடத்த முடிவு செய்து உள்ளார்.

    மாமல்லபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் தனது ஒரே மகனுக்கு வேஷ்டி அணியும் விழா நடத்த தனியாக அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு குடும்பத்துடன் சென்று கொடுத்து அழைத்து வருகிறார்.

    இந்த அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வருகிற 24-ந்தேதி மாலை நடைபெற உள்ள இந்த வேஷ்டி அணியும் விழாவுக்கு தனியாக மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அன்று தடபுடல் விருந்துடன் தாய்மாமன் முறைப்படி சடங்குகளுடன் விழா நடைபெறுகிறது.

    இதுகுறித்து வெங்கடேஷ் கூறும்போது, எனது சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் ஒங்கோல் ஆகும். அங்கு இது போன்று ஆண் குழந்தைகளுக்கு விழா எடுப்பது சகஜம். தமிழ்நாட்டில் இதை யாரும் விரும்புவதில்லை, நான் எங்கள் ஊர் வழக்கப்படி பாரம்பரிய விழாவாக இதை செய்கிறேன் என்றார்.

    Next Story
    ×