search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்- முதலமைச்சர் டுவிட்டர் பதிவு
    X

    இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்- முதலமைச்சர் டுவிட்டர் பதிவு

    • கடந்த 18-12-2021 அன்று இன்னுயிர் காப்போம் திட்டத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் தொடங்கி வைத்தேன்.
    • இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் உருவான இன்னுயிர் காப்போம் திட்டம், ஒரு முன்மாதிரி திட்டம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சொன்னதைச் செய்வது மட்டுமல்ல; சொல்லாமலும் செய்வோம். செய்கிறோம்.

    தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. ஆனால் கோல்டன் ஹவர்ஸ் காலக்கட்டத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென, கடந்த 18-12-2021 அன்று இன்னுயிர் காப்போம் திட்டத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் தொடங்கி வைத்தேன்.

    இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் உருவான இந்தத் திட்டம், ஒரு முன்மாதிரி திட்டம்.

    இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-ஆவது பேராகப் பனிமலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயனடைந்திருக்கிறார்.

    ஒன்றரை லட்சம் பேர் அல்ல; அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்டுள்ளன என்ற நெகிழ்வோடு இதனைப் பகிர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×