search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் கனமழை: 8 விமானங்கள் ரத்து
    X

    சென்னையில் கனமழை: 8 விமானங்கள் ரத்து

    • அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    • 15 விமானங்கள் காலதாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து அந்தமான், ஐதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் உட்பட 15 விமானங்கள் காலதாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×