search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்னூர் பேருந்து விபத்து- இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊரில் நல்லடக்கம்
    X

    குன்னூர் பேருந்து விபத்து- இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊரில் நல்லடக்கம்

    • 9 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலமாக கடையம் கொண்டுவரப்பட்டது.
    • உயிரிழந்தவர்களின் உடல்களை பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    தென்காசி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்றுமுன் தினம் சுற்றுலா வந்த பஸ், மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனைத்தொடர்ந்து, குன்னூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து 9 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களது சொந்த ஊரான கடையம் கொண்டுவரப்பட்டது. பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பின்னர், கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக, இறுதிச்சடங்குகள் செய்து உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டன.

    Next Story
    ×