என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு மேடை அமைக்க பூமி பூஜை
    X

    பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு மேடை அமைக்க பூமி பூஜை

    • பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தை தொடங்கி வைக்கிறார்.
    • தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பிரதமர் மோடி தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறார்.

    அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார். தொடர்ந்து மதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    மறுநாள் (28-ந்தேதி) காலை தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி துறை முகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து காணொலி காட்சி மூலம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தை தொடங்கி வைக்கிறார்.

    பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் கல்லூரி மைதானத்திற்கு வரும் பிரதமர் மோடி பாளை ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


    பாளையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்ட முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான பூமி பூஜை பணி பெல் மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது.

    விழாவில் தமிழக சட்டமன்ற பா.ஜ.க. குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட தலைவர்கள் தயாசங்கர், தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி மற்றும் நிர்வாகிகள் வேல் ஆறுமுகம், பாபுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி 15 முறைக்கு மேல் தமிழகத்திற்கு வந்துள்ளார். தற்போது முதல் முறையாக நெல்லைக்கு பிரதமர் வருகிறார். பிரதமர் வருகையால் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்கள் மத்தியில் மிகப்பெரிய மன மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    தாமரைக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மீண்டும் 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் எனஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக உள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பா.ஜ.க.விற்கு தருவார்கள் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×