search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆவடி அருகே வீடு புகுந்து கள்ளக்காதலி கண் முன்பு டிரைவர் வெட்டிக் கொலை
    X

    ஆவடி அருகே வீடு புகுந்து கள்ளக்காதலி கண் முன்பு டிரைவர் வெட்டிக் கொலை

    • விஜய லட்சுமியின் கணவரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    • கள்ளக்காதல் தகராறில் வீடுபுகுந்து டிைரவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த பொத்தூர் செல்வகணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது29). கார் டிரைவர். இவருக்கும் கணவரை பிரிந்து வாழ்ந்த உறவினரான நசரத் பட்டையை சேர்ந்த விஜய லட்சுமி என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    பின்னர் இருவரும் கணவன்-மனைவிபோல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் வேலைக்காக வெளியே செல்ல சுரேஷ் குமார் புறப்பட்டு கொண்டு இருந்தார்.

    அப்போது வீட்டுக்குள் திடீரென கத்தி, அரிவாளுடன் மர்ம நபர்கள் திடீரென புகுந்தனர். அவர்கள் சுரேஷ் குமாரை சுற்றி வளைத்து வெட்ட முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் சுற்றி வளைத்த கும்பல் வீட்டுக்குள்ளேயே சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டினர்.

    காதலன் சுரேஷ்குமாரை மர்ம கும்பல் வெட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி அவர்களை தடுக்க முயன்றார். இதில் அவரது கையிலும் பலத்த வெட்டு விழுந்தது.

    பின்னர் கொலை வெறி கும்பல் சுரேஷ்குமாரை கள்ளக்காதலி கண்முன்னேயே வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது சுரேஷ்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ந்தனர்.

    இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கையில் வெட்டுக்காயம் அடைந்த விஜயலட்சுமிக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில் விஜய லட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளகாதல் விவகாரத்தில் சுரேஷ்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

    சுரேஷ்குமாரும், விஜய லட்சுமியும் உறவினர்கள் ஆவர். விஜயலட்சுமி கணவரை பிரிந்த பின்னர் சுரேஷ்குமாருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்து உள்ளார்.

    இதனால் விஜயலட்சுமியின் கணவர், மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதனால் அவர் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது. மேலும் தங்களது பிரிவுக்கு சுரேஷ்குமார் தான் காரணம் என்று கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சுரஷே்குமார் வீடு புகுந்து கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே விஜய லட்சுமியின் கணவரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கள்ளக்காதல் தகராறில் வீடுபுகுந்து டிைரவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×