என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கல்லூரி வாசலில் தந்தையை தாக்கிய விவகாரம்- 6 பேர் அதிரடி கைது
    X

    கல்லூரி வாசலில் தந்தையை தாக்கிய விவகாரம்- 6 பேர் அதிரடி கைது

    • கல்லூரி வாசலில், பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததைக் கண்டு கல்லூரி மாணவிகள் அலறியடித்து ஓடினர்.
    • செல்லூர் போலீசார் இச்சம்பவத்தின் பேரில் வழக்குப்பதிந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

    மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் நேற்று முன்தினம் மாலை மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தி வந்தது. இதன் முன்பாக சில இளைஞர்கள் குடிபோதையில் டூவீலர்களில் ஹார்ன் அடித்து கொண்டும், கத்திக் கொண்டும் கொண்டும் அதிவேகமாக ஓட்டி வந்தனர். அப்போது, அந்த ரோட்டில் சென்றவர்கள் அனைவரும் பீதியடைந்து ஓடினர். சரியாக அந்தநேரம், கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவிகளும் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர்.

    அப்போது கல்லூரியில் படிக்கும் தன் மகளை அழைத்து செல்ல வந்த ஒரு தந்தை, டூவீலரில் கத்தி கொண்டு வந்த குடிமகன்களை பார்த்து கண்டித்துள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த போதைக் கும்பல், உடனே தங்களது வண்டிகளை நிறுத்திவிட்டு இறங்கி வந்து மகளின் கண் முன்பாகவே அந்த தந்தையை தாங்கள் வைத்திருந்த ஹெல்மெட் உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். கல்லூரி வாசலில், பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததைக் கண்டு கல்லூரி மாணவிகள் அலறியடித்து ஓடினர்.

    இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே செல்லூர் போலீசார் இச்சம்பவத்தின் பேரில் வழக்குப்பதிந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில், மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மதுபோதையில் தகராறு செய்த அச்சம்பத்துவை சேர்ந்த ராமமூர்த்தி, சோமசுந்தரம், சிவஞானம், நாகப்பிரியன், சதீஷ்குமார், அஜித்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கல்லூரி முன்நின்ற மாணவியின் தந்தையை தாக்கிய நிலையில் 6 பிரிவுகளின் கீழ் செல்லூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    Next Story
    ×