search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடும்ப உறவை நினைத்து போட்டியை தவிர்த்த ஏ.கே.மூர்த்தி
    X

    குடும்ப உறவை நினைத்து போட்டியை தவிர்த்த ஏ.கே.மூர்த்தி

    • ஆரணி தொகுதி விஷ்ணு பிரசாத்திற்கு கிடைக்காததால் அவர் கடலூர் தொகுதியை பெற்றுள்ளார்.
    • பா.ம.க. மற்றும் த.மா.கா. இடையே தொகுதி உடன்பாடு செய்வதில் சிக்கல் நீடித்தது.

    சென்னை:

    தேர்தல் கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட ருசிகர சம்பவம் வெளியாகியுள்ளது.

    இன்னும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு முடிந்த பட்டியல் இல்லை. இதுதொடர்பாக விசாரித்த போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு கடலூர் தொகுதியை ஒதுக்கிய நிலையில் அந்த தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்குவதாக பேசி இருக்கிறார்கள். அந்த தொகுதியில் பா.ம.க.வின் நட்சத்திர வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை களமிறக்க முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஆரணி தொகுதி விஷ்ணு பிரசாத்திற்கு கிடைக்காததால் அவர் கடலூர் தொகுதியை பெற்றுள்ளார்.

    விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் வேட்பாளராக இருந்தாலும் பா.ம.க. தலைவர் அன்புமணியின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    எனவே அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த பா.ம.க. தயங்கியது. அதனால் தான் கடைசி நேரத்தில் பா.ம.க. மயிலாடுதுறை தொகுதியை கேட்டது.

    அந்த தொகுதி த.மா.கா.விற்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால், பா.ம.க. மற்றும் த.மா.கா. இடையே தொகுதி உடன்பாடு செய்வதில் சிக்கல் நீடித்தது. கடைசியில் மயிலாடுதுறை தொகுதி பா.ம.க.விற்கு ஒதுக்கப்பட்டது. இந்த பிரச்சினைகளால் பா.ம.க. சார்பில் ஏ.கே.மூர்த்தி போட்டியிட முடியாமல் போனது.

    ஏற்கனவே மற்ற தொகுதிகளுக்கு தொகுதி முடிவாகி போனதால் கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

    Next Story
    ×