search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் விலைவாசி உயர்வை கண்டித்து 30 இடங்களில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    சென்னையில் விலைவாசி உயர்வை கண்டித்து 30 இடங்களில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் தங்க சாலை, பெரம்பூர் ரெயில் நிலையம் அருகில் ஆகிய 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

    கடந்த 13-ந்தேதி சென்னை உள்பட 15 மாவட்டங்களில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் தலைமை தாங்கினார்கள்.

    சென்னையில் மட்டும் சுமார் 30 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி தலைமையில் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெரு, கிண்டி மடுவங்கரை, ஜாபர்கான்பேட்டை ஆகிய 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் தங்க சாலை, பெரம்பூர் ரெயில் நிலையம் அருகில் ஆகிய 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    பகுதி செயலாளர்கள் முகுந்தன், பரமகுரு உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆர்.கே.நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகிலும், சர்மாநகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தொழிற்பேட்டை பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் சார்பில் அமைப்பு செயலாளரும் மாவட்ட செயலாளருமான நா.பாலகங்கா தலைமையில் துறைமுகம் தொகுதியில் சக்கரை செட்டி தெரு, அம்மன் கோவில் தெரு, எழும்பூர் தொகுதியில் சூளை அவதாமா பாப்பையர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட பி.வி.நாயக்கன் தெருவில் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையிலும், ஆயிரம் விளக்கு தெற்கு கோடம்பாக்கம் தர்மாபுரத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் தலைமையிலும், ஆயிரம் விளக்கு வடக்கு பகுதியில் சூளைமேட்டில் சங்கரதாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் தி.நகர் சத்தியா தலைமையில் கோடம்பாக்கம் பவர் அவுஸ், மற்றும் அண்ணா ஆர்ச் ஆகிய 2 இடங்களிலும் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் பெருங்குடி கந்தன்சாவடி, கண்ணகி நகர், சோழிங்கநல்லூர் சந்திப்பு, மடிப்பாக்கம் கூட்ரோடு ஆகிய 4 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆலந்தூரில் பகுதி செயலாளர் பரணி பிரசாத் தலைமையிலும், கண்டோன் மெண்ட் பகுதியில் பகுதி செயலாளர் வேல்ராஜா தலைமையிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டார்.

    Next Story
    ×