search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய 90 ஆயிரம் பேர் முன்பதிவு
    X

    தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய 90 ஆயிரம் பேர் முன்பதிவு

    • விரைவு பஸ்களைப் பொருத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும்.
    • தீபாவளி முடிந்து ஊா் திரும்புவதற்காக 12-ந்தேதி பிற இடங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம் பேரும், 13-ந்தேதி 26 ஆயிரம் பேரும், 14-ந்தேதி 16 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனா்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    விரைவு பஸ்களைப் பொருத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும்.

    அந்த வகையில், கடந்த மாதமே முன்பதிவு தொடங்கியது. அதன்படி, வருகிற 9-ந்தேதி பயணிக்க 25 ஆயிரம் போ், 10-ந் தேதி பயணிக்க 45 ஆயிரம் போ், 11-ந்தேதி பயணிக்க 20 ஆயிரம் போ் என மொத்தம் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா்.

    இதில், அதிகபட்சமாக சென்னையில் இருந்து வருகிற 10-ந்தேதி பயணிக்க 28 ஆயிரம் பேரும், பிற இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க 15 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனா்.

    இதேபோல, தீபாவளி முடிந்து ஊா் திரும்புவதற்காக 12-ந்தேதி பிற இடங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம் பேரும், 13-ந்தேதி 26 ஆயிரம் பேரும், 14-ந்தேதி 16 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனா்.

    Next Story
    ×