என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பாளையங்கோட்டையில் அரசு அதிகாரி வீட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை
- வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை மகாராஜ நகர் வேலவர் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் முருகப்பெருமாள் (வயது 54). இவர் நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வுபெற்று விட்டார். இந்நிலையில் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்றிருந்தார். இன்று காலை அங்கிருந்து நெல்லைக்கு திரும்பிய அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை காணவில்லை. மேலும் அதே பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அவர் ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்