search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4 மாவட்டங்களில் 1135 ஏரிகள் நிரம்பின
    X

    4 மாவட்டங்களில் 1135 ஏரிகள் நிரம்பின

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 462 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் 442 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து காணப்பட்டது. மிச்சாங் புயல் மற்றும் கனமழை காரணமாக 4 மாவட்ட ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் சென்னையில் 26 ஏரிகள் முழுமையாக நிரம்பின. மீதமுள்ள 2 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 462 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 68 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 442 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன. 59 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 205 ஏரிகள் நிரம்பி உள்ளன. 104 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. 4 மாவட்டங்களிலும் மொத்தம் 1135 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

    Next Story
    ×