search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் கோடை மழை இதுவரை இயல்பை விட 72% குறைவாக பெய்துள்ளது
    X

    தமிழ்நாட்டில் கோடை மழை இதுவரை இயல்பை விட 72% குறைவாக பெய்துள்ளது

    • வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
    • இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது.

    குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர், பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் 43.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதாவது 111 டிகிரி வெப்பம் தாக்கி உள்ளது.

    இந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரி வித்துள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மே 1 முதல் மே 6 வரையிலான காலகட்டத்தில் 19.8 மி மீ மழை பதிவாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 71.4 மி மீ ஆகும். ஆகவே கோடை மழை இதுவரை இயல்பை விட 72% குறைவாக பெய்துள்ளது.

    Next Story
    ×