search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
    X

    கோப்பு படம்.

    தமிழகத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

    • தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை கடைகள் மூடல்.
    • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு.

    இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தமிழகத்தில் கட்சி தலைவர்கள் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், 17-ந்தேதி மாலை ஐந்து மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும்.

    அதனால் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

    அதனைத்தொடர்ந்து தமிழக அரசு மூன்று நாட்களை டாஸ்மாக் மூடப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளது.

    Next Story
    ×