search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருத்தணியில் கோடை வெயிலுக்கு இதமான பனை ஓலை விசிறி தயாரிப்பு அதிகரிப்பு
    X

    திருத்தணியில் கோடை வெயிலுக்கு இதமான பனை ஓலை விசிறி தயாரிப்பு அதிகரிப்பு

    • கோடை காலைத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பனை ஓலை விசிறி தயாரித்து விற்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஒரு ஜோடி விசிறியின் விலை ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை, திருத்தணி உள்ளிட்ட பல இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட பழங்கள், குளிர்பானத்தை தேடி மக்கள் செல்கிறார்கள். இதனால் சாலையோரங்களில் ஏராளமான திடீர் குளிர்பான கடைகள் முளைத்து உள்ளன.

    திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதியில் மலைகள் சூழ்ந்து உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகலில் வெயில் கொளுத்துவதால் வெப்பத்தினால் மக்கள் தவித்து வருகிறார்கள். வீட்டில் உள்ள மின் விசிறிகளில் இருந்து அனல் காற்று வீசுவதால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பனை ஓலை விசிறிகளை தேடி மக்கள் திரும்பி உள்ளனர். வெயிலுக்கு இதமான குளிர்ந்த காற்று தரும் பனை ஓலை விசிறிகளை திருத்தணி ஒன்றியம் சிறுகுமி ஊராட்சிக்கு உட்பட்ட வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தில் அதிக அளவில் செய்யப்பட்டு வருகின்றன.

    கோடை காலைத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பனை ஓலை விசிறி தயாரித்து விற்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு ஜோடி ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இதுகுறித்து பனை ஓலை விசிறி செய்யும் பெண் ஒருவர் கூறும்போது, விசிறி செய்வதற்கு கோடைகாலம் தொடங்குவதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னரே பனை ஓலைகளை மரங்களில் இருந்து வெட்டி எடுத்து வந்து உலறவைப்போம்.

    தற்போது அதிகரித்து வரும் வெயிலினால் ஏற்படும் புழுக்கத்தில் இருந்தும், அனல் காற்றில் இருந்தும் பொதுமக்கள் தப்பிக்க இந்த பனை ஓலை விசிறிகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். ஒரு ஜோடி விசிறியின் விலை ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பகுதியில் தயாரிக்கப்படும் விசிறிகள் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், வாலாஜா, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சில்லரை விற்பனையாகவும், மொத்த விற்பனையாகவும் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் பனை ஓலை விசிறி விற்பனை அதிகளவு இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

    Next Story
    ×