என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
![234 தொகுதியிலும் மக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்துங்கள்- கமல்ஹாசன் 234 தொகுதியிலும் மக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்துங்கள்- கமல்ஹாசன்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/31/1974785-21.webp)
234 தொகுதியிலும் மக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்துங்கள்- கமல்ஹாசன்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கமல்ஹாசன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளராக மதுரையை சேர்ந்த சொக்கரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார்.
- பாராளுமன்ற தேர்தல் வருவதால் அடுத்த 6 மாதத்துக்குள் நீங்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் தங்கவேலு வரவேற்று பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளராக மதுரையை சேர்ந்த சொக்கரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார்.
பேரவையின் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம், தலைமை நிலைய மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், பேரவையின் மாநில பொருளாளர் பானுமதி, துணைத் தலைவர்கள் மாடசாமி, ராஜன், குணசேகரன், மெல்கியோ சுதன், சுரேஷ், ஆனந்த், ரவிச்சந்திரன், சங்கீதா, கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பேரவையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இப்பொதுக்குழு கூட்டத்தில், ராஜலட்சுமி அம்மையார் மய்யம் தொழிற்சங்கமும், மய்யம் திருப்பூர் பனியன் தொழிற்சங்கமும், நம்மவர் தொழிற்சங்கப்பேரவையில் இணைந்தது. கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:- மக்கள் நீதி மையத்தின் நம்மவர் தொழிற்சங்க பேரவையை வலுப்படுத்தும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும். 234 தொகுதிகளிலும் அனைத்து இடங்களிலும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் நம்மவர் தொழிற்சங்கங்களை தொடங்கி கட்சியை பலப்படுத்துங்கள். பாராளுமன்ற தேர்தல் வருவதால் அடுத்த 6 மாதத்துக்குள் நீங்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் கட்சியை அடுத்த கட்டத்துக்கு நம்மால் எடுத்து செல்ல முடியும். இவ்வாறு கமல்ஹாசன் பேசியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)