search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனமழை எதிரொலி: நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
    X

    கனமழை எதிரொலி: நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
    • கனமழையால் நெல்லை, கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில்கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடக்க இருந்த பருவ தேர்வு மற்றொரு நாளில் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

    இதேபோல், கனமழை எதிரொலியாக தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×