search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: சரத்குமார் அறிக்கை
    X

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: சரத்குமார் அறிக்கை

    • வருங்காலத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் மாநில பேரிடர் மேலாண்மை சிறப்பு படை அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வருவாய் ஈட்ட முடியாமல் தவிக்கும் குடும்பங்களின் பொருளாதார தேவைக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்களை பெரும் இன்னலுக்கு தள்ளிய இந்த இயற்கை பேரிடரால் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போதும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.

    வருங்காலத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் மாநில பேரிடர் மேலாண்மை சிறப்பு படை அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், வருவாய் ஈட்ட முடியாமல் தவிக்கும் குடும்பங்களின் பொருளாதார தேவைக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×