search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தருமபுரி அருகே  ஜல்லிகட்டு விழாவில் சீறிபாய்ந்த காளைகள்
    X

    தருமபுரி அருகே ஜல்லிகட்டு விழாவில் சீறிபாய்ந்த காளைகள்

    • ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினர்.
    • ஜல்லிக்கட்டு போட்டியின் போது 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி அடுத்த சோகத்தூர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தருமபுரி சேலம், புதுக்கோட்டை, மதுரை, கிருஷ்ணகிரி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினர்.

    இதில் தன்னை அடக்க வந்த வீரர்களை காளைகள் தூக்கி வீசியது. போட்டியில் காயம் அடைந்தவர்ளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், மிக்சி, மின்விசிறி, ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இந்த ஜல்லிகட்டில் சுமார் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை பொதுமக்கள் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியின் போது 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    Next Story
    ×