search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
    X

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

    • தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது.
    • 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    வங்க கடலில் தென் கிழக்கு பகுதியில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது.

    இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் மிக பலத்த மழை பெய்தது.

    இன்று குறைந்த காற்றழுத்தம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சை, தென்காசி, நெல்லை, ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்ட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×