search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மொழியை வைத்து அரசியல் செய்வதை கைவிட வேண்டும்- புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்
    X

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

    மொழியை வைத்து அரசியல் செய்வதை கைவிட வேண்டும்- புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்

    • அவரவர்களுக்கு தேவையான மொழியை கற்றுக் கொள்கிற சுதந்திரம் வேண்டும்.
    • இதை சொன்னவுடனேயே மொழி திணிப்பு என்று சிலர் தவறாக முன் நிறுத்துகிறார்கள்.

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்திய மொழிகள் வார விழாவில் கலந்து கொண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு தமிழிசை அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:


    மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டு விட்டு, அவரவர்களுக்கு என்ன மொழி தேவையோ அந்த மொழியை கற்றுக் கொள்கிற சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இன்னொரு மொழியை கற்றுக் கொள் என்ற சொன்னவுடனேயே அதை திணிப்பு என்று தவறாக முன் நிறுத்துகிறார்கள், இது திணிப்பு அல்ல. இனிப்பான தமிழை அனைவரும் கற்க வேண்டும். நம் தமிழை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு, மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×