search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்- அரசு பொருட்காட்சியை 1¼ லட்சம் பேர் கண்டு ரசித்தனர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்- அரசு பொருட்காட்சியை 1¼ லட்சம் பேர் கண்டு ரசித்தனர்

    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் விதமாக நிகழ்ச்சிகள், விளையாட்டு சாதனங்கள் இடம் பெற்றுள்ளன.
    • பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்காட்சிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. 125 சிறிய கடைகள், 60 தனியார் அரங்குகள் இதில் இடம் பெற்றுள்ளன. 70 ஆயிரம் சதுர அடியில் பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் விதமாக நிகழ்ச்சிகள், விளையாட்டு சாதனங்கள் இடம் பெற்றுள்ளன.

    பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்காட்சிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 47 ஆயிரம் பேர் பொருட்காட்சியை கண்டு களித்தனர். இந்த எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது. மாட்டு பொங்கல் தினமான நேற்று 72,547 பேர் வருகை புரிந்துள்ளனர். 58 518 பெரியவர்களும், 14,029 சிறியவர்களும் பொருட்காட்சியை பார்த்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகை நாளில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை காணும் பொங்கல் தினமான இன்று அதிகரிக்கும். இன்று குடும்பம் குடும்பமாக மக்கள் பொருட்காட்சிக்கு வருவார்கள். இதனால் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    Next Story
    ×