search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதைக்கு போலீஸ் பாதுகாப்பு
    X

    கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பாதை

    மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதைக்கு போலீஸ் பாதுகாப்பு

    • மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை பிறர் பயன்படுத்துவதாக புகார்.
    • அனைவரும் பயன்படுத்தினால் பாதை சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாக குற்றசாட்டு.

    சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத் திறனாளிகளும் ரசிப்பதற்காக நிரந்தர நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டது. சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப் பட்ட இந்த சிறப்பு பாதையை கடந்த 27ந் தேதி அமைச்சர்கள் மற்றும் உதயநிதி எம்எல்ஏ ஆகியோர் திறந்து வைத்தனர்.

    மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிரமம் இன்றி நடக்க இந்த நடைபாதையின் இருபுறங்களிலும் மரத்தால் ஆன கைப்பிடிகள் அழகுற அமைக்கப்பட்டு இருக்கிறது. சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த சிறப்பு பாதை வழியாக கடலின் அருகே சென்று அலைகளில் கால்களை நனைத்தபடி கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்காக சர்வீஸ் சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிறப்பு பாதை திறக்கப்பட்ட முதல் நாள் மாற்று திறனாளிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மற்றவர்களும் அந்த பாதையை பயன்படுத்தி கடற்கரைக்குள் செல்வதாக புகார் எழுந்துள்ளது. அனைவரும் பயன்படுத்தும் போது சிறப்பு பாதை சேதம் அடையும் என்றும், இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்று திறனாளிகள் சிலர் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து மெரினாவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பாதைக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×