search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 9 பேர் யார்?- சஸ்பென்ஸ் நீடிப்பு
    X

    காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 9 பேர் யார்?- சஸ்பென்ஸ் நீடிப்பு

    • விருதுநகர், கரூர் ஆகிய தொகுதிகளை கேட்டு பெரிய அளவில் யாரும் மோதவில்லை.
    • விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் எம்.பி., சிந்துஜா ஆகிய இருவரது பெயர்கள் மட்டுமே இடம் பெற்று உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    இந்த தொகுதிகளில் போட்டியிட மனு கொடுத்திருக்கும் தலைவர்கள் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று தவித்து கொண்டிருக்கிறார்கள்.

    தமிழக தேர்தல் குழுவினர் வாய்ப்பு கேட்டவர்கள் பட்டியலை தயாரித்து டெல்லிக்கு அனுப்பி இருக்கிறார்கள். நேற்று இரவு மேலிட குழுவினருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசித்து ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர் கொண்ட பட்டியலை தயாரித்தனர்.

    இதில் விருதுநகர், கரூர் ஆகிய தொகுதிகளை கேட்டு பெரிய அளவில் யாரும் மோதவில்லை. இந்த தொகுதிகளில் ராகுலின் நேரடி பார்வையில் உள்ள வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாகவும் அதனால்தான் மற்றவர்கள் மனு செய்யவே தயங்கியதாகவும் கூறப்படுகிறது.

    கரூர் தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் ஜோதிமணி எம்.பி. அவரது தீவிர எதிர்ப்பாளர் பேங்க் சுப்பிரமணி ஆகிய இருவரது பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

    அதே போல் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் எம்.பி., சிந்துஜா ஆகிய இருவரது பெயர்கள் மட்டுமே இடம் பெற்று உள்ளது.

    மற்ற தொகுதிகளில் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் பெயர் விவரங்கள் வருமாறு:-

    கன்னியாகுமரி: விஜய் வசந்த் எம்.பி., ராபர்ட் புரூஸ், பிரின்ஸ் எம்.எல்.ஏ.,

    திருநெல்வேலி: திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு,

    சிவகங்கை: கார்த்தி சிதம்பரம், எம்.பி., சுதர்சனன் நாச்சியப்பன், திருநாவுக்கரசர்

    கிருஷ்ணகிரி: டாக்டர் செல்லக்குமார் எம்.பி., தங்கபாலு, கோபிநாத்

    மயிலாடுதுறை: திருநாவுக்கரசர், பிரவீன் சக்ரவர்த்தி, டாக்டர் விஷ்ணு பிரசாத்

    கடலூர்: கே.எஸ்.அழகிரி, நாசே ராமச்சந்திரன், சி.டி.மெய்யப்பன், சுதா ராமகிருஷ்ணன்

    திருவள்ளூர்: பி.விசுவநாதன், சசிகாந்த் செந்தில், ரஞ்சன் குமார், லெனின் பிரசாத்.

    இந்த பட்டியலை மத்திய தேர்தல் கமிட்டியினர் இன்று பரிசீலித்து வேட்பாளர்களை முடிவு செய்கிறார்கள். இன்று இரவுக்குள் முதல் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×