search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
    X

    அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

    • தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
    • இறுதி வாக்காளர் பட்டியல் மனு தாக்கல் முடிவடைந்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலை அமைதியான முறையிலும், நேர்மையாகவும், நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வக்கீல் பிரிவு செயலாளர் இன்பதுரை, பா.ஜனதா சார்பில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் சார்பில் எஸ்.கே.நவாஸ், சந்திரமோகன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ரவீந்திரநாத் பெரியசாமி, மார்க்சிஸ்டு சார்பில் பீமாராவ், ஆறுமுக நயினார், தே.மு.தி.க. சார்பில் வக்கீல் சந்தோஷ் குமார், மாறன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி, சார்லஸ், தேசிய மக்கள் கட்சி சார்பில் சீனிவாசன், கார்த்திக், லோக் தந்திரிக் ஜனதாதளம் சார்பில் கார்த்திகேயன், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    இறுதி வாக்காளர் பட்டியல் மனு தாக்கல் முடிவடைந்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற எடுத்துள்ள நடவடிக்கை பற்றியும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் கூறப்பட்டது.

    Next Story
    ×