என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ். மகன், அண்ணாமலை உள்பட 39 பேர் சந்திப்பு
- ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடி பிற்பகலில் ராமேசுவரம் வந்தார்.
- ராமேசுவரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி 12.15 மணிக்கு மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
மதுரை:
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழா மற்றும் ஆன்மீக பயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி 19-ந்தேதி மாலை சென்னை வருகை தந்தார். நேற்று ஸ்ரீரங்கம் சென்ற அவர், பிற்பகலில் ராமேசுவரம் வந்தார்.
இரவில் அங்கு தங்கிய பிரதமர் மோடி இன்று அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தரிசனம் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டார். 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பகல் 12.40 மணிக்கு மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
முன்னதாக 11.50 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி 12.15 மணிக்கு மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார். டெல்லி புறப்படும் முன்பாக அவர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தர்மர் எம்.பி. உள்ளிட்ட 39 பேரை சந்தித்தார்.
பின்னர் அவர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்