search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
    X

    வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

    • சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை உயர்ந்துள்ளது.
    • கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து கடந்த ஒரு மாதமாக குறைந்துள்ளது.

    சென்னை:

    நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சத்திற்கு சென்ற தக்காளி விலை உயர்வு பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளிலும் எதிரொலித்தது. இதனை தொடர்ந்து தக்காளியின் விலை படிப்படியாக வீழ்ச்சி அடைந்தது. தற்போது மத்திய, மாநில அரசுகளின் கவனம் விலை உயர்ந்த வெங்காயத்தின் பக்கம் திரும்பி உள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வருவதுடன், வடமாநிலங்களில் உள்ள ஒரு சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க இருப்பதால், வெங்காயத்தின் விலை உயர்வு மத்திய, மாநில அரசுகளை மட்டும் அல்லாது இல்லத்தரசிகளையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.

    வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்காக வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு வரி விதித்திருப்பது மட்டுமல்லாது, தனது சேமிப்பில் உள்ள வெங்காயத்தை மொத்தச் சந்தையில் விடுவித்து சில்லறை விலையைக் குறைக்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் தாராளமாகக் கிடைப்பதை உறுதிப்படுத்தும் முயற்சியிலும் மத்திய, மாநில அரசுகள் இறங்கி உள்ளது.

    நாட்டிலேயே மிகப்பெரிய வெங்காய மொத்த விலை சந்தையான மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.42 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை உயர்ந்துள்ளது. வெளிசந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. அதேபோல் சின்ன வெங்காயமும் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் பண்டிகை காலத்தில் இதுபோன்று விலை உயர்ந்து, தேவையான அளவு வெங்காயத்தை வாங்க முடியாததால் இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கோயம்பேட்டில் உள்ள வெங்காயம் விற்பனையாளர்கள் கூறும்போது, 'கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. நாளொன்றுக்கு 7 ஆயிரம் டன் வெங்காய வரத்து இருந்து வந்ததால் விலையும் சீராக இருந்தது. தற்போது திடீரென வெங்காய வரத்து குறைந்துவிட்டது. இதனால் வெங்காய விலை கிடுகிடுவென உயரத் தொடங்கிவிட்டது.

    நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிர மாநிலத்தில் முறையாக பெய்யாததால், காரிப் பருவத்தில் (ஜூலை - ஆகஸ்டு) வெங்காயம் நடவு நடைபெறவில்லை. அதனால் அக்டோபர் மாதம் வெங்காய அறுவடை நடைபெறாததால், கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து கடந்த ஒரு மாதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, இருப்பில் வைத்துள்ள வெங்காயத்தை விடுவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அடுத்த சில தினங்களில் வெங்காயம் வரத்து அதிகரித்து விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

    Next Story
    ×