என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல்
- தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்திருக்கிறது.
- வருகிற 22-ந்தேதி முதல் 25-ந்தேதிக்குள் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. தற்போது வரை தென்மேற்கு பருவமழையால் மழை பெய்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்திருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாகவும், நாளை மறுதினம் (சனிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாகவும் ஆய்வுமையம் அறிவித்து இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், இதன் காரணமாக மத்திய வங்கக்கடல் பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து குமரிக்கடல் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை வரை வரக்கூடிய நாட்களில் பெய்யக்கூடும்.
இதனால் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும், அதன்படி, வருகிற 22-ந்தேதி முதல் 25-ந்தேதிக்குள் பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் சொல்லப்படுகிறது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில், 'நாலுமுக்கு 10 செ.மீ., கோழிப்போர்விளை, பரமக்குடி, பில்லூர் அணை மேட்டுப்பாளையம் தலா 9 செ.மீ., திண்டிவனம், குருந்தன்கோடு தலா 8 செ.மீ., ஊத்து, செங்கோட்டை, பாபநாசம், பெருஞ்சாணி அணை, முள்ளங்கினாவிளை தலா 6 செ.மீ., காக்காச்சி, தக்கலை, புத்தன் அணை, பேச்சிப்பாறை, பாலமோர், அடையாமடை, மாஞ்சோலை, சுருளக்கோடு, தேக்கடி தலா 5 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்